search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கடலூரில் சாராயம் கடத்திய வாலிபர் கைது

    கடலூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் கடத்திய வாலிபரை கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜி மற்றும் போலீசார் குண்டுசாலை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டைகளை வைத்துக்கொண்டு ஒருவர் வேகமாக வந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது, அவர் கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் வீராசாமி மகன் சிலம்பரசன் (வயது 33) என்று தெரிந்தது.

    இதையடுத்து அவர் கொண்டு வந்த சாக்கு மூட்டைகளை போலீசார் பிரித்து பார்த்த போது, அதில் 60 லிட்டர் சாராயம் இருந்தது. அதை அவர் புதுச்சேரியில் இருந்து கடத்தி கடலூர் முதுநகருக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×