என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசிகலா விடுதலை ஆனவுடன் ஓசூரில் தங்குகிறாரா?
Byமாலை மலர்15 Jan 2021 9:19 AM GMT (Updated: 15 Jan 2021 9:19 AM GMT)
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆனவுடன் சசிகலா ஓசூரில் தங்குகிறாரா? என்பதற்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் பி.பழனியப்பன் பதில் அளித்துள்ளார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில், ஓசூர் தாலுகா அலுவலகம் அருகே நேற்று கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு மேற்கு மாவட்ட செயலாளர் மாரேகவுடு தலைமை தாங்கினார்.
இதில், கட்சியின் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கலந்து கொண்டு, கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சசிகலா, விரைவில் வருவது நல்ல செய்தியாகும். கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய வேண்டும் என்ற உறுதியுடன் அ.ம.மு.க.வினர் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
சசிகலாவை தமிழகமே திரண்டு வந்து வரவேற்க காத்திருக்கிறது. இந்த 2021-ஆம் ஆண்டு அ.ம.மு.க.விற்கும், தமிழக மக்களுக்கும் நிச்சயம் நல்ல எதிர்காலத்தை தரக்கூடிய ஆண்டாக அமையும். சசிகலா, எந்த நேரத்தில் விடுதலை செய்யப்படுவார் என்பது இன்னும் உறுதியாகவில்லை,
எனவே, அவர் விடுதலை ஆனவுடன் ஓசூரில் தங்குகிறாரா? அல்லது வேறெங்கு தங்குவார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அப்போதைய கால, சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்யப்படும். சசிகலா, அ.தி.மு.க.வில் சேருவாரா அல்லது அ.ம.மு.க.வில் தொடர்வாரா? என்பது அவர் வரும்போது தான் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில், ஓசூர் தாலுகா அலுவலகம் அருகே நேற்று கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு மேற்கு மாவட்ட செயலாளர் மாரேகவுடு தலைமை தாங்கினார்.
இதில், கட்சியின் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கலந்து கொண்டு, கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சசிகலா, விரைவில் வருவது நல்ல செய்தியாகும். கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய வேண்டும் என்ற உறுதியுடன் அ.ம.மு.க.வினர் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
சசிகலாவை தமிழகமே திரண்டு வந்து வரவேற்க காத்திருக்கிறது. இந்த 2021-ஆம் ஆண்டு அ.ம.மு.க.விற்கும், தமிழக மக்களுக்கும் நிச்சயம் நல்ல எதிர்காலத்தை தரக்கூடிய ஆண்டாக அமையும். சசிகலா, எந்த நேரத்தில் விடுதலை செய்யப்படுவார் என்பது இன்னும் உறுதியாகவில்லை,
எனவே, அவர் விடுதலை ஆனவுடன் ஓசூரில் தங்குகிறாரா? அல்லது வேறெங்கு தங்குவார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அப்போதைய கால, சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்யப்படும். சசிகலா, அ.தி.மு.க.வில் சேருவாரா அல்லது அ.ம.மு.க.வில் தொடர்வாரா? என்பது அவர் வரும்போது தான் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X