search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    வேதாரண்யம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை- 25 பேர் மீது வழக்கு

    வேதாரண்யம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி, சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் மற்றும் போலீசார் வேதாரண்யம் பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் 25 கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×