search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    ஆவடியில் போலீஸ் நிலையத்துக்கு வி‌ஷம் குடித்து வந்த கள்ளக்காதல் ஜோடி- காதலன் பலி

    ஆவடி அருகே போலீஸ் நிலையத்துக்கு வி‌ஷம் குடித்து வந்த கள்ளக்காதல் ஜோடியினர் மயங்கி விழுந்தனர். இதில் காதலன் பரிதாபமாக உயிரிழந்தார். காதலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆவடி:

    ஆவடியை அடுத்த மோரை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது33). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    ஆனந்தனுக்கும் வேலை பார்க்கும் இடத்தில் பணி செய்யும் அரக்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த திருமணமான 27 வயது இளம்பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இளம் பெண்ணுக்கு கணவரும், 4 குழந்தைகளும் உள்ளனர்.

    கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிந்ததால் அவர் கண்டித்தார். இதற்கிடையே ஆனந்தனும், இளம்பெண்ணும் கடந்த 4-ந்தேதி வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் கணவர், மனைவியை மீட்டுத்தருமாறு ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண், திடீரென தனது கணவரின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ‘உங்களை கடைசியாக பார்க்க வேண்டும். ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள்’ என்று தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து இளம்பெண்ணின் கணவர் போலீஸ் நிலையம் அருகே காத்திருந்தார். அப்போது போலீஸ் நிலையத்திற்கு வந்த ஆனந்தனும், இளம்பெண்ணும் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.

    இதைத்தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரித்தபோது கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்து இருப்பது தெரிந்தது. உடனடியாக அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆனந்தன் பரிதாபமாக இறந்தார். இளம்பெண் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார்.

    இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×