search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சாரயம் பதுக்கி வைத்திருந்த 4 பெண்கள் உள்பட 5 பேர் கைது

    சாரயம் பதுக்கி வைத்திருந்த 4 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில், மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் தானிப்பாடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மோத்தகல், வேப்பூர் செக்கடி, தட்டரணை பகுதியில் மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 1,800 லிட்டர் சாராய ஊறல் பூமிக்கு அடியில் மறைத்து வைத்திருந்ததை கணடுபிடித்து கைப்பற்றி அழித்தனர்.

    மேலும் விற்பனைக்கா சாராயம் பதுக்கி வைத்தி்ருந்ததாக மோத்தகல் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 32), வேப்பூர்செக்கடியை சேர்ந்த அலமேலு (53), தட்டரணை கிராமத்தை சேர்ந்த அமுதா (32), சித்திரா (43), கல்யாணி (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த சாராயத்தையும் கைப்பற்றி அழித்தனர்.
    Next Story
    ×