search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாராயணசாமி.
    X
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாராயணசாமி.

    புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக 3-வது நாளாக போராட்டம்

    புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் 3-வது நாளாக போராட்டம் நடத்துகின்றனர்.
    புதுச்சேரி:

    ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாகவும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக்கூறி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நேற்றுமுன்தினம் காலையில் அண்ணாசிலை அருகே தர்ணா போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக நீட்டித்தப்போராட்டம் இரவிலும் நீடித்தது.

    கொட்டும் மழையிலும் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சாலையில் படுத்து உறங்கினர். காங்கிரஸின் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

    இந்நிலையில் இன்று 3-ம் நாளாக காங்கிரசாரின் போராட்டம் தொடர்கிறது. சுமார் 300-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் போராட்டக்களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×