என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,437 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 68 ஆயிரத்து 760 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,428 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    16,100 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 3,043 பேரின் பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 99 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்பட வில்லை.

    மாவட்டத்தில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,437 ஆக உயர்ந்துள்ளது.

    1,896 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. மாவட்ட சுகாதாரத்துறை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க நடவடிக்கை எடுக்காமல் தினசரி ஆயிரக்கணக்கானோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகளை நிலுவையில் வைக்கும் நிலை தொடர்கிறது.

    அருப்புக்கோட்டையில் கடந்த மாதம் 31-ந் தேதி சபரிமலையில் திரும்பிய ஒருவரின் பரிசோதனை முடிவுகள் நான்கு நாட்கள் கழித்து கடந்த 4-ந்தேதி தேதி தெரிவிக்கப்பட்டதால் அதற்குள் அவரது குடும்பத்தார் 7 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. தற்போது இந்த குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    பரிசோதனை முடிவுகள் தாமதம் செய்வதால் தான் இம்மாதிரியான நோய் பரவல் ஏற்படும் நிலை உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட சுகாதாரத்துறை கூறிய அறிவுறுத்தல் வழங்கவேண்டுமென கோரப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனை முகாம்கள் எந்தெந்த இடங்களில் நடத்தப்படுகின்றன என்று முன்னறிவிப்பு ஏதும் இல்லாததால் பதிவு செய்ய விரும்புபவர்கள் முகாம் நடக்கும் இடம் தெரியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

    எனவே மாவட்ட சுகாதாரத்துறை மாவட்டத்தில் குறிப்பிட்ட தாலுகாக்களில் எந்தெந்த இடங்களில் பரிசோதனை முகாம்கள் நடைபெறுகின்றன என்பதை உரிய முறையில் முன்கூட்டியே அறிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டியதும் அவசியமாகும்.
    Next Story
    ×