என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வருகிற 17ந் தேதி 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து- கலெக்டர் தகவல்
Byமாலை மலர்9 Jan 2021 5:34 AM GMT (Updated: 9 Jan 2021 5:34 AM GMT)
2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் வருகிற 17-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:-
5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முன்னரே போலியோ சொட்டு மருந்து அளித்தாலும், 17-ந் தேதி இலவசமாக சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது. கொரோனா காலம் என்பதால் போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வரும்போது முகக்கவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியும் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்து 19 ஆயிரத்து 952 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 7814 பணியாளர்களுடன், 2031 பகுதிகளில் முகாம்கள் செயல்பட உள்ளது. இதற்கான பணியாளர்கள் முகாம் நடைபெறும் நாளன்று அந்தந்த முகாம்களிலேயே குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிப்பார்கள். மறுநாள் முதல் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு வீட்டிலேயே சொட்டு மருந்து அளிப்பார்கள்.
இதில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், ரெயில் நிலையம், பஸ் நிலையம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் போன்ற இடங்களிலும் நடமாடும் முகாம் மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒரு குழந்தை கூட விடுபடாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயினை ஒழிப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, இணை இயக்குனர் (நலப் பணிகள்) கண்ணகி, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) அஜிதா, உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் வருகிற 17-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:-
5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முன்னரே போலியோ சொட்டு மருந்து அளித்தாலும், 17-ந் தேதி இலவசமாக சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது. கொரோனா காலம் என்பதால் போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வரும்போது முகக்கவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியும் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்து 19 ஆயிரத்து 952 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 7814 பணியாளர்களுடன், 2031 பகுதிகளில் முகாம்கள் செயல்பட உள்ளது. இதற்கான பணியாளர்கள் முகாம் நடைபெறும் நாளன்று அந்தந்த முகாம்களிலேயே குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிப்பார்கள். மறுநாள் முதல் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு வீட்டிலேயே சொட்டு மருந்து அளிப்பார்கள்.
இதில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், ரெயில் நிலையம், பஸ் நிலையம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் போன்ற இடங்களிலும் நடமாடும் முகாம் மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒரு குழந்தை கூட விடுபடாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயினை ஒழிப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, இணை இயக்குனர் (நலப் பணிகள்) கண்ணகி, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) அஜிதா, உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X