என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோப்பு படம்.
சங்கராபுரத்தில் குழந்தையுடன் தாய் கடத்தல்- வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
By
மாலை மலர்7 Jan 2021 2:16 PM GMT (Updated: 7 Jan 2021 2:16 PM GMT)

சங்கராபுரத்தில் குழந்தையுடன் இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சங்கராபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம், ஐங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரை மகன் இளங்கோ(வயது 38). இவர் தனது மனைவி மாயாவதி(35) மற்றும் குழந்தைகளுடன் சங்கராபுரத்தில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு வந்தார்.
இந்நிலையில் மாயாவதி அவரது ஒரு வயது குழந்தை யுவனேஸ்வரனுடன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளங்கோ மனைவி மற்றும் குழந்தையை தேடி அலைந்தார். ஆனால் எங்கு தேடியும் அவர்களை காணவில்லை. விசாரணையில் தேவபாண்டலத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் அருள்(36) என்பவர் மாயாவதியையும் அவரது குழந்தையையும் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து சங்கராபுரம் போலீசில் இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் தாயையும், அவர்களை கடத்திய வாலிபரையும் வலைவீசி தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
