search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வெவ்வேறு விபத்துகளில் அரசு பஸ் கண்டக்டர்- தொழிலாளி உயிரிழப்பு

    வெவ்வேறு விபத்துகளில் அரசு பஸ் கண்டக்டர்- தொழிலாளி பரிதாபமாக இறந்தனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமழபாடி காந்திநகரை சேர்ந்தவர் ஒப்பில்லாமணி(வயது 50). இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளில் சாத்தமங்கலம் கிராமத்தில் இருந்து சொந்த ஊரான திருமழபாடிக்கு வந்தார். அரண்மனைக்குறிச்சியை அடுத்துள்ள தில்லை காளியம்மன் கோவில் அருகே வந்தபோது, சாலையின் ஓரத்தில் கரும்புகள் ஏற்றப்பட்ட நிலையில் நின்று கொண்டிருந்த டிப்பர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஒப்பில்லாமணியை அருகே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் வடுகர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(45). மரத்தாலான பொருட்கள் செய்யும் தச்சு தொழிலாளியான இவர், நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் கல்லாத்தூரில் உள்ள மரப்பட்டறைக்கு சென்றுவிட்டு மீண்டும் வடுகர்பாளையத்துக்கு ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். ஜெயங்கொண்டத்தை அடுத்த கொளத்தூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நின்றது. இதனால் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு, பெட்ரோல் விற்பனை நிலையம் நோக்கி சென்றார்.

    அப்போது சென்னையில் இருந்து அரியலூர் நோக்கி வந்த அரசு பஸ், தட்ணாமூர்த்தி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தட்சிணாமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்த தட்சிணாமூர்த்திக்கு மலர்விழி என்ற மனைவியும், ஆகாஷ், தனுஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
    Next Story
    ×