என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் - 4 பேர் மீது வழக்குப்பதிவு

    சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் காளீஸ்வரி (வயது 29). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரன் என்பவருக்கும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இருந்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் காளீஸ்வரி குறித்து சந்திரன் தரப்பினர் சமூக வலை தளங்களில் அவதூறாக தகவல் பரப்பியதாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து காளீஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்திரனின் மகன்கள் சத்தியராஜ், சங்கர், உறவினர் நந்தீஸ்வரன், முத்துக்குமார் ஆகியோரிடம் கேட்ட போது அவர்கள் பஞ்சாயத்து தலைவரை அசிங்கமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காளீஸ்வரி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சத்தியராஜ் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×