என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணிடம் நூதன முறையில் நகை பறிப்பு - 2 பெண்களுக்கு வலைவீச்சு
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணிடம் நூதன முறையில் நகை பறித்து சென்ற 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரி தங்கம் (வயது 50). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ்நிலையம் அருகே உள்ள ஆலயம் அருகே நடந்து வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு அடையாளம் தெரியாத 2 பெண்கள் வந்து, மாரி தங்கத்திடம் பேச்சு கொடுத்தனர். அப்போது அவர்கள் தங்களிடம் 8 பவுன் தங்க நாணயங்கள், காசு மணிகள் உள்ளது. இந்த தங்க நாணயங்களை பெற்று கொண்டு, 5 பவுன் நகை தந்தால் போதும் என ஆசை வார்த்தை கூறினர்.
அவர்கள் சொன்னதை நம்பிய மாரிதங்கம் தன்னிடம் இருந்த 5 பவுன் நகையை கழற்றி கொடுத்தார்.
நகையை பெற்றுக்கொண்ட அந்த பெண்கள் 2 பேரும் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதனால் சந்தேகம் அடைந்த மாரிதங்கம் அந்த தங்க நாணயங்களை கடைக்கு சென்று சோதனை செய்து பார்த்த போது அத்தனை நகைகளும் போலியானது என்பது தெரியவந்தது.
இதுகுறித்து மாரிதங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் நூதன முறையில் பெண்ணிடம் இருந்து நகையை பறித்து சென்ற அந்த 2 பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story






