என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சாத்தூர் அருகே ரூ.5 ஆயிரம் புகையிலை பாக்கெட் பறிமுதல் - 2 பேர் கைது

    சாத்தூர் அருகே ரூ.5 ஆயிரம் புகையிலை பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹீம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள பெட்டி கடை அருகே ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து புகையிலை வைத்திருந்த சாத்தூரை சேர்ந்த கண்ணன் (வயது 40), ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த முத்துகுமார் (36) ஆகியோரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகளையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×