search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேதாரண்யம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

    வேதாரண்யம் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பையை மறைத்து வைத்துக்கொண்டு ஏதோ சீட்டுகளை விற்பனை செய்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தோப்புத்துறை பகுதியை சேர்ந்த முகமது யூசுப் (வயது39) என்பதும், அவர் பையில் மறைத்து வைத்து லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது யூசுப்பை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×