search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    பாகூர் அருகே மெக்கானிக்கை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

    பாகூர் அருகே மெக்கானிக்கை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    பாகூர்:

    பாகூர் கம்பன் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். சதீஷ் குமார் வேலைக்கு செல்வதற்காக பாகூர் அருகே பரிக்கல்பட்டு ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டார். அப்போது அளவு குறைந்து இருப்பதாக பங்க் ஊழியரிடம் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இந்த நேரத்தில் அங்கு பெட்ரோல் போட வந்த ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்தவர், பங்க் ஊழியருக்கு ஆதரவாக பேசியதால், சதீஷ்குமாருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்தவரும், பங்க் ஊழியரும் சேர்ந்து சதீஷ்குமாரை தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×