என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
கடலூரில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
கடலூரில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள திரவுபதிஅம்மன் கோவில் அருகே இருந்த மரத்தில் நேற்று காலை முதியவர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தூக்கில் பிணமாக தொங்கிய முதியவரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி பகுதியை சேர்ந்த நாகப்பன் (வயது 65) என்பது தெரிய வந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகப்பன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள திரவுபதிஅம்மன் கோவில் அருகே இருந்த மரத்தில் நேற்று காலை முதியவர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தூக்கில் பிணமாக தொங்கிய முதியவரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி பகுதியை சேர்ந்த நாகப்பன் (வயது 65) என்பது தெரிய வந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகப்பன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






