என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருமயம் அருகே டவுன் பஸ் மோதி முதியவர் பலி

    திருமயம் அருகே டவுன் பஸ் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமயம்:

    திருமயம் அருகே உள்ள மெய்யபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 72). இவர் நேற்று காலை 5 மணி அளவில் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக திருமயத்தில் இருந்து கடியாப்பட்டி நோக்கி சென்ற அரசு டவுன் பஸ் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. 

    இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாரியப்பன் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×