என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    இளையான்குடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி

    இளையான்குடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள கரும்பு கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (36). இதே ஊரைச் சேர்ந்த ஜெயந்த்ராஜ் மகன் மரியஹீலன் (24). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சாலைக்கிராமம் நோக்கி சென்றனர். அப்போது துகவூர் விலக்கு நான்கு ரோட்டில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த ரகுபதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மரியஹீலன் மீது வழக்குபதிவு செய்து இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×