search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குருபரப்பள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    குருபரப்பள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரியை அடுத்த கே.பூசாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 31). தச்சுத்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது. கடந்த 25-ந் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

    இதனால் மனமுடைந்த மணி விஷம் குடித்து விட்டுவீட்டுக்கு அருகில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மணி இறந்தார். தகவல் அறிந்த மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி தற்கொலை ெசய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×