search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    போளூரில் சாராயம் விற்ற மூதாட்டி கைது

    போளூரில் சாராயம் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் டவுன் இந்திரா நகரில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்.

    அப்பகுதியில் சாராயம் விற்ற குப்பு (வயது 67) என்ற மூதாட்டியை கைது செய்து அவரிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தார்.
    Next Story
    ×