என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரம் அருகே ரூ.6 கோடி மோசடி செய்த தனியார் நிறுவன நிதி அலுவலர் கைது
Byமாலை மலர்27 Dec 2020 10:15 AM GMT (Updated: 27 Dec 2020 10:15 AM GMT)
காஞ்சீபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடியே 86 லட்சம் மோசடி செய்ததாக முதன்மை நிதி அலுவலரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டம் காரை கிராமத்தில் டயர் தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாக பணியாற்றி வந்தவர் புதுச்சேரியை சேர்ந்த சிவஸ்ரீராமுலு (வயது 45).இவர் தான் பணியாற்றி வரும் நிறுவனத்தின் ரூ.5 கோடியே 86 லட்சத்தை நிறுவனத்திற்கு சம்பந்தம் இல்லாத சிலரது வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டு அதை அவர்களிடமிருந்து பொய்யான காரணங்கள் கூறி திரும்ப பெற்றுள்ளார்.இவரது மோசடியானது அநத நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான அருளுக்கு தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவர் காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த சிவஸ்ரீராமுலுவை கைது செய்தனர்.பின்னர் அவரை காஞ்சீபுரத்திற்கு கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X