search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காஞ்சீபுரம் அருகே ரூ.6 கோடி மோசடி செய்த தனியார் நிறுவன நிதி அலுவலர் கைது

    காஞ்சீபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடியே 86 லட்சம் மோசடி செய்ததாக முதன்மை நிதி அலுவலரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் காரை கிராமத்தில் டயர் தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாக பணியாற்றி வந்தவர் புதுச்சேரியை சேர்ந்த சிவஸ்ரீராமுலு (வயது 45).இவர் தான் பணியாற்றி வரும் நிறுவனத்தின் ரூ.5 கோடியே 86 லட்சத்தை நிறுவனத்திற்கு சம்பந்தம் இல்லாத சிலரது வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டு அதை அவர்களிடமிருந்து பொய்யான காரணங்கள் கூறி திரும்ப பெற்றுள்ளார்.இவரது மோசடியானது அநத நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான அருளுக்கு தெரியவந்தது. 

    இதை தொடர்ந்து அவர் காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த சிவஸ்ரீராமுலுவை கைது செய்தனர்.பின்னர் அவரை காஞ்சீபுரத்திற்கு கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×