என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
சிவகாசி அருகே இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்
சிவகாசி அருகே இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் சுவர்ணலட்சுமி (வயது 26). இவர் சிவகாசி சேர்மன் அருணாசலம் ரோட்டில் உள்ள ரஜித்பாலாஜியிடம் ரூ.2 லட்சம் முன்பணம் கொடுத்து பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் தனக்கு மேலும் ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என்று ரஜித்பாலாஜி கேட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.. ஆத்திரம் அடைந்த ரஜித்பாலாஜி, சுவர்ணலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுவர்ண லட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






