என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா பொருட்கள் பறிமுதல்
    X
    குட்கா பொருட்கள் பறிமுதல்

    திருவண்ணாமலையில் ரூ.2 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது

    திருவண்ணாமலையில் ரூ.2 லட்சம் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அரவிந்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் டெல்டா தனிப்படையினர் சிவன்படை தெருவில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மளிகைக்கடை ஒன்றில் ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த திருவண்ணாமலையை சேர்ந்த பாரஸ் (வயது32), சித்திக் (38) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×