என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை திருட்டு
    X
    நகை திருட்டு

    ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு- போலீசார் விசாரணை

    ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேவங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி செங்கனி. இவர் நேற்று அரியலுார் மாவட்டம் கருக்கையில் இருந்து விருத்தாசலத்திற்கு அரசு பஸ்சில் வந்தார்.

    விருத்தாசலம் பஸ் நிலையத்துக்க வந்த அவர், தான் பையில் வைத்திருந்த பர்சை திறந்து பார்த்தார். அதில் வைத்திருந்த 4½ பவுன் நகையை காணவில்லை. பஸ்சில் வரும்போதே அவரது நகையை மர்ம மனிதர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


    Next Story
    ×