என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரதராமியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- பெண் பலி
Byமாலை மலர்24 Dec 2020 9:45 AM GMT (Updated: 24 Dec 2020 9:45 AM GMT)
பரதராமியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற பெண் மீது லாரி மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குடியாத்தம்:
குடியாத்தத்தை அடுத்த பரதராமி புட்டவாரிபல்லி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், விவசாயி, அவரது மனைவி கவிதா (வயது 34). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் கவிதா மோட்டார் சைக்கிளில் தனது கிராமத்தில் இருந்து பரதராமி நோக்கி சென்றார். அப்போது சித்தூரில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த லாரி திடீரென கவிதா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த கவிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கவிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X