search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - வாலிபர் பலி

    காஞ்சீபுரம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ஓரிக்கை அண்ணா நகரை சேர்ந்தவர் அன்புராஜ் (வயது 33). இவர் தனது மனைவி மற்றும் 2 வயது பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் பூரிவாக்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் காஞ்சீபுரத்திற்கு வந்தார். பரந்தூர்- மதுரமங்கலம் ரோடு வழியாக நாகப்பட்டு கிராமம் என்ற இடத்தில் இவர்கள் வந்த போது, வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச்சென்று விட்டார்.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அன்புராஜ் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அன்புராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மனைவி மற்றும் குழந்தை லேசான காயங்களுடன், காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×