என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி தேங்கி கிடக்கும் காட்சி.
    X
    பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி தேங்கி கிடக்கும் காட்சி.

    மயிலாடுதுறை வ.உ.சி. தெருவில் தேங்கி கிடக்கும் சாக்கடைநீர்

    சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் வகையில் மயிலாடுதுறை வ.உ.சி. தெருவில் தேங்கி கிடக்கும் சாக்கடை நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் கடந்த 2007-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக நகரில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் குழாய் மற்றும் ஆள்நுழைவுத் தொட்டிகள் உடைந்து சாலைகள் உள்வாங்கி உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு தரங்கம்பாடி சாலையில் ஆள்நுழைவுத் தொட்டி உடைந்ததால் சாலை உள்வாங்கியது. அந்த பகுதியில் தற்போது சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் கூறைநாடு வ.உ.சி. தெருவில் உள்ள ஆள்நுழைவுத் தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி, தெருவில் சுகாதாரகேட்டை உருவாக்கும் வகையில் குட்டைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியே சென்று வரமுடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். வீட்டிற்குள்ளும் துர்நாற்றம் வீசுகிறது.

    இதேபோல கூறைநாடு திருமஞ்சனவீதி, எடத்தெரு, வெள்ளந்தாங்கி அய்யனார் கோவில் தெரு, அண்ணா வீதி உள்பட பல இடங்களில் ஆள்நுழைவுத் தொட்டிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு அந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சேதமடைந்துள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் மற்றும் ஆள்நுழைவுத் தொட்டிகளை சீரமைத்து கழிவுநீர் வெளியேறாதபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×