என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோப்புபடம்
பென்னாகரத்தில் பெண் போலீஸ் ஏட்டுவை மிரட்டிய வாலிபர் கைது
By
மாலை மலர்21 Dec 2020 11:29 AM GMT (Updated: 21 Dec 2020 11:29 AM GMT)

பென்னாகரத்தில் பெண் போலீஸ் ஏட்டுவை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பென்னாகரம்:
பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி செய்து வருபவர் கலையரசி (வயது 41). இவர் நேற்று முன்தினம் பென்னாகரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது டிப்டாப் உடையுடன் அங்கு வந்த ஒரு வாலிபர், மேடம் உங்களுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதிகா சான்றிதழ் வழங்க அழைத்து வருமாறு கூறினார் என்று தெரிவித்தார்.
இதனால் அந்த வாலிபரிடம் சில நிமிடங்கள் பேசிய ஏட்டு கலையரசிக்கு அந்த நபர் மீது சந்தேகம் வந்தது. இதனால் அவரை பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது அந்த வாலிபர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சங்கர் நகரைச் சேர்ந்த சின்னையா மகன் பெரியசாமி (29) என தெரியவந்தது. மேலும் அவர் கடந்த மாதம் 22-ந்் தேதி ஏட்டு கலையரசிக்கு போன் செய்து நான் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதிகா பேசுகிறேன் என்று பெண் குரலில் வீடியோ காலில் பேசி மிரட்டியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பெண் போலீஸ் ஏட்டை மிரட்டிய பெரியசாமியை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
