search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    ராஜபாளையம் பகுதிகளில் நாளை மின்தடை

    ராஜபாளையம் பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் கோட்டம் முடங்கிய சாலையில் உள்ள உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே அய்யனார் கோவில் பகுதி, ராஜுக்கள் கல்லூரி பகுதி, மாலையாபுரம், தாட்கோ காலனி, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், சோமையபுரம், சம்மந்தபுரம், சின்ன, பெரிய சுரைக்காய்பட்டி பகுதிகள் பழைய பாளையம், மாடசாமி கோவில் தெரு, ஆவரம்பட்டி, ரெயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, பழைய பஸ் நிலையம், பெரியகடை பஜார் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    அதேபோல சேத்தூர் உப மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுவதால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்ல மங்கலம், ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மாலதி கூறினார்.
    Next Story
    ×