என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் சிப்காட் போலீசார், சந்தாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடையின் உரிமையாளரான சீனிவாசன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதே போல், பாகலூர் போலீசார், உஸ்தனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த முருகன் (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதே போல், சூளகிரி போலீசார், மாதரசனப்பள்ளி பகுதியில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை வைத்திருந்த சுரேஷ்(45) என்பவர கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×