என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
ஊத்தங்கரை அருகே பள்ளி மாணவி கடத்தல் - வாலிபர் மீது போலீசில் புகார்
ஊத்தங்கரை அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை அருகே உள்ள சென்னூரை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவருடைய உறவினர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதில் போச்சம்பள்ளி தாலுகா சுண்டகாப்பட்டியை சேர்ந்த பிரபு (வயது 25) என்பவர் மாணவியை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






