என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விக்கிரமங்கலம் அருகே மது விற்ற 2 பெண்கள் கைது

    விக்கிரமங்கலம் அருகே மது விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் கொலையனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கோலையனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சகுந்தலா(வயது 46) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். 

    இதில் அவர் வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் விக்கிரமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த மாதவி (36) என்பவரது வீட்டில் சோதனை செய்து, விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் சகுந்தலா, மாதவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×