என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.டி.வி. தினகரன் பிறந்த நாள்
    X
    டி.டி.வி. தினகரன் பிறந்த நாள்

    டி.டி.வி. தினகரன் பிறந்த நாளையொட்டி கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

    டி.டி.வி. தினகரன் பிறந்த நாளையொட்டி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கபப்பட்டது.
    கடலூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்த நாள் விழா கடலூர் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் கடலூரில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள நாகம்மன்கோவிலில் டி.டி.வி. தினகரன் நீண்ட நாள் வாழ வேண்டி சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு கடலூர் ஆதரவற்றோர் இல்லத்தில் கேக் வெட்டி, மதிய உணவு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கபப்பட்டது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினர்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளர் கே.எஸ்.கே. பாலமுருகன் கலந்து கொண்டு 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வழங்கினார். இதில் நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில நிர்வாகி சத்தியராஜ், மாநில மாணவரணி துணை செயலாளர் சிவக்குமார், மாவட்ட அவை தலைவர் முருகன், மாவட்ட இணை செயலாளர் உமா, மாவட்ட துணை செயலாளர் சேகர், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவக்குமார், பேரவை செயலாளர் தங்கவேல், ஒன்றிய செயலாளர்கள் பாடலீஸ்வரன், மணிவண்ணன், ராஜராஜன், செல்வம், அருள்செல்வன், பேரூர் செயலாளர்கள் பிரவீன்குமார், பாக்கியராஜ், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் ஆனந்தன், மாவட்ட தலைவர் வேலாயுதம், வர்த்தக அணி செயலாளர் பிரபு மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் பிறந்த நாளையொட்டி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் 32 பேர் ரத்த தானம் வழங்கினர்.
    Next Story
    ×