search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி
    X
    நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

    சாத்தூர் அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சாத்தூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் மண்டல செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் பிரபு மற்றும் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாத்தூர் தொகுதி செயலாளர் பாண்டி மற்றும் சாத்தூர் தொகுதி தலைவர் முனியப்பன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தினை ஒருங்கிணைத்தனர். விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை அமைப்பைச் சேர்ந்தவர்கள் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையை தாமதப்படுத்தும் தமிழக ஆளுநரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    Next Story
    ×