என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தூர் அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்13 Dec 2020 12:44 PM GMT (Updated: 13 Dec 2020 12:44 PM GMT)
வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சாத்தூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூர்:
சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் மண்டல செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் பிரபு மற்றும் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாத்தூர் தொகுதி செயலாளர் பாண்டி மற்றும் சாத்தூர் தொகுதி தலைவர் முனியப்பன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தினை ஒருங்கிணைத்தனர். விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை அமைப்பைச் சேர்ந்தவர்கள் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையை தாமதப்படுத்தும் தமிழக ஆளுநரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X