என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேதாரண்யம், கீழ்வேளூரில் புகையிலை பொருட்கள் விற்ற 41 பேர் மீது வழக்கு

    வேதாரண்யம், கீழ்வேளூரில் புகையிலை பொருட்கள் விற்ற 41 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.

    இதைப்போல கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மலர்க்கொடி மற்றும் போலீசார் கரியாப்பட்டினம் பகுதியில்

    ரோந்து பணியில் ஈடுபட்டு பெட்டிக்கடைகளில் புகையிலை விற்பனை செய்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.

    மேலும் வேட்டைகாரனிருப்பு போலீஸ் சரகத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் கீழ்வேளூர், கோவில்கடம்பனூர், ஆழியூர், சிக்கல், பொரவச்சேரி பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இதில் கடைகளில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×