என் மலர்
செய்திகள்

சிறுத்தை கடித்து கொன்ற நாயை படத்தில் காணலாம்.
தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்து நாய்களை கடித்து கொன்ற சிறுத்தை
தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்து நாய்களை சிறுத்தை கடித்து கொன்றதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், தலமலை உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் புலி, சிறுத்தை போன்றவை கிராமம் மற்றும் தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை கடித்து கொல்வது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் தாளவாடி அருகே உள்ள கிராமத்துக்குள் புகுந்து நாய்களை கடித்து கொன்ற சம்பவம் நடந்து உள்ளது.
தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட பாரதிபுரம் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சித்தன் (வயது 48). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். மேலும் காவலுக்காக வீட்டில் 2 நாயும் வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டின் முன்பு நாயை கட்டி வைத்து விட்டு தூங்க சென்றுவிட்டார். நேற்று காலையில் எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த நாய்களில் ஒன்றை காணவில்லை. மற்றொரு நாய் கழுத்தில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த நாயை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவான கால் தடங்களை ஆய்வு செய்தபோது அது சிறுத்தையின் கால் தடம் என தெரியவந்தது.
நள்ளிரவில் சித்தன் வீட்டு பகுதிக்கு வந்த சிறுத்தை ஒன்று 2 நாய்களை கடித்து கொன்றதுடன், அதில் ஒரு நாயை கவ்வி வனப்பகுதிக்குள் இழுத்து சென்றதும் தெரியவந்தது.
கிராமத்துக்குள் புகுந்து நாய்களை சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், தலமலை உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் புலி, சிறுத்தை போன்றவை கிராமம் மற்றும் தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை கடித்து கொல்வது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் தாளவாடி அருகே உள்ள கிராமத்துக்குள் புகுந்து நாய்களை கடித்து கொன்ற சம்பவம் நடந்து உள்ளது.
தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட பாரதிபுரம் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சித்தன் (வயது 48). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். மேலும் காவலுக்காக வீட்டில் 2 நாயும் வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டின் முன்பு நாயை கட்டி வைத்து விட்டு தூங்க சென்றுவிட்டார். நேற்று காலையில் எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த நாய்களில் ஒன்றை காணவில்லை. மற்றொரு நாய் கழுத்தில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த நாயை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவான கால் தடங்களை ஆய்வு செய்தபோது அது சிறுத்தையின் கால் தடம் என தெரியவந்தது.
நள்ளிரவில் சித்தன் வீட்டு பகுதிக்கு வந்த சிறுத்தை ஒன்று 2 நாய்களை கடித்து கொன்றதுடன், அதில் ஒரு நாயை கவ்வி வனப்பகுதிக்குள் இழுத்து சென்றதும் தெரியவந்தது.
கிராமத்துக்குள் புகுந்து நாய்களை சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.
Next Story






