search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் கிடந்த ரூ.59 லட்சம் தங்கம் பறிமுதல்

    துபாயில் இருந்த சென்னை வந்த சிறப்பு விமானத்தின் இருக்கைக்கு அடியில் கிடந்த ரூ.59 லட்சம் ம திப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    பயணிகள் அனைவரும் இறங்கி சென்றபிறகு அந்த விமானத்துக்குள் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு இருக்கையின் அடியில் 2 பொட்டலங்கள் கேட்பாரற்று கிடந்தது. அதை பிரித்து பார்த்தபோது தங்கத்தூள்கள் இருந்தன.

    ரூ.59 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து சென்னைக்கு அந்த தங்கத்தை கடத்தி வந்தவர்கள், விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து அதை இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது.

    அந்த தங்கத்தை கடத்தி வந்தது யார்?. இருக்கைக்கு அடியில் அதை வைத்துவிட்டு பின்னர் ஊழியர்கள் உதவியுடன் அதை வெளியே கொண்டுவர திட்டமிடப்பட்டதா? என்ற கோணத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×