என் மலர்tooltip icon

    செய்திகள்

    நலத்திட்ட உதவிகள்
    X
    நலத்திட்ட உதவிகள்

    மனுநீதி திட்ட முகாமில் 77 பேருக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

    ஈரோடு மாவட்ட கலெக்டரின் மனுநீதி திட்ட முகாம் நேற்று கொல்லம்பாளையம் ஆசிரமம் பள்ளிக்கூட வளாகத்தில் நடந்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டரின் மனுநீதி திட்ட முகாம் நேற்று கொல்லம்பாளையம் ஆசிரமம் பள்ளிக்கூட வளாகத்தில் நடந்தது. இந்த முகாமில் ஈரோடு “இ” கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    முகாமுக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். முகாமில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு) ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். மொத்தம் 77 பேருக்கு 9 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டன.

    இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு இலவச ஸ்கூட்டர்கள், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டன.

    முன்னதாக பொதுமக்களிடம் இருந்து 190 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.

    முகாமில் ஈரோடு ஆர்.டி.ஓ. எஸ்.சைபுதீன், மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி சீனிவாசன், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி பூங்கோதை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி இளங்கோ, ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், ஈரோடு தாசில்தார் அ.பரிமளாதேவி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மாலதி, அ.தி.மு.க. பகுதி செயலாளர் கோவிந்தராஜ், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பகுதி செயலாளர் கேபிள் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×