என் மலர்
செய்திகள்

மரணம்
கீழ்பென்னாத்தூர் அருகே வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
கீழ்பென்னாத்தூர் அருகே வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருங்காலிகுப்பம் பெரிய தெருவை சேர்ந்தவர் முனுசாமி. அவரது மகன் அய்யப்பன் (வயது 32). இவர் சம்பவத்தன்று வீட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






