என் மலர்
செய்திகள்

ஊருக்குள் புகுந்த காட்டு யானை
கெலமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை - கிராம மக்கள் அச்சம்
கெலமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் அப்பகுதி கிராம மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு காட்டு யானை நேற்று கெலமங்கலம் அருகே உள்ள கோட்டட்டி கிராமத்திற்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு இருந்த முட்டைகோஸ் மலர்களை மிதித்து சேதப்படுத்தியது.
தொடர்ந்து அந்த யானை ஜக்கேரி, பொம்மதாத்தனூர், லட்சுமிபுரம், புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் சென்றது. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று பட்டாசுகள் வெடித்து யானையை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினார்கள். காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.
Next Story






