என் மலர்
செய்திகள்

வீடு புகுந்து கொள்ளை
திருமயம் அருகே வீட்டின் கதவை உடைத்து திருட்டு
திருமயம் அருகே வீட்டின் கதவை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:
திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் ரெயில் நிலையம் பகுதியில் வசித்து வருபவர் சங்கர் மனைவி சாந்தி. இவர் மாடி வீட்டின் கீழ் பகுதியிலும், அண்ணன் மோகன் சிங் மாடியிலும் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று உள்ளனர். இதையடுத்து நேற்று இரவு மோகன்சிங் வீட்டிற்கு வந்து, வீட்டின் முன்பக்க கதைவை திறந்த போது சாந்தி வீட்டின் பின்பக்கம் கதவு உடைந்து திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் திருட்டு நடந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் நமணசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் வீட்டின் உரிமையாளர் சாந்தி வெளியூர் சென்று இருப்பதால் அவர் வந்த பிறகு தான் திருட்டு போன பொருட்கள் குறித்து தெரியவரும். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






