என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை - கலெக்டர் தகவல்
Byமாலை மலர்5 Dec 2020 4:10 PM GMT (Updated: 5 Dec 2020 4:10 PM GMT)
அறந்தாங்கி அருகே மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
அறந்தாங்கி அருகே அமரசிம்மேந்திரபுரம் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் கூறுகையில், “மாவட்டத்தில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழையினால் அறந்தாங்கி வருவாய் கோட்டத்தில் 20 இடங்களில் மின் தடை ஏற்பட்டதை உடனடியாக சரிசெய்யப்பட்டன.
மாவட்டத்தில் மழையினால் சேதமடைந்த 118 வீடுகளின் உரிமையாளர்களுக்கும், மழையினால் சிறு காயமடைந்த 2 பேருக்கும், இறந்த 12 கால்நடைகளின் உரிமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும். இதேபோல மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருவமழையினால் மாவட்டத்தில் நீர்நிலைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது” என்றார். அப்போது சப்-கலெக்டர் ஆனந்த்மோகன், வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் பாஸ்கரன், மின்சார வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் செந்தில்குமார், தாசில்தார் மார்டின் லூதர் கிங் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X