search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி
    X
    புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி

    மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை - கலெக்டர் தகவல்

    அறந்தாங்கி அருகே மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    அறந்தாங்கி அருகே அமரசிம்மேந்திரபுரம் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் கூறுகையில், “மாவட்டத்தில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழையினால் அறந்தாங்கி வருவாய் கோட்டத்தில் 20 இடங்களில் மின் தடை ஏற்பட்டதை உடனடியாக சரிசெய்யப்பட்டன. 

    மாவட்டத்தில் மழையினால் சேதமடைந்த 118 வீடுகளின் உரிமையாளர்களுக்கும், மழையினால் சிறு காயமடைந்த 2 பேருக்கும், இறந்த 12 கால்நடைகளின் உரிமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும். இதேபோல மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருவமழையினால் மாவட்டத்தில் நீர்நிலைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது” என்றார். அப்போது சப்-கலெக்டர் ஆனந்த்மோகன், வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் பாஸ்கரன், மின்சார வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் செந்தில்குமார், தாசில்தார் மார்டின் லூதர் கிங் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×