என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காரைக்காலில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

    காரைக்காலில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் கோட்டுச்சேரியை அடுத்த பூவம் மாரியம்மன் கோவில் வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் சுற்றிக் கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் காரைக்கால் நேருநகர் குறிஞ்சி வீதியை சேர்ந்த செய்யது இப்ராகிம் (வயது 32) என்பதும், அவர் தனது நண்பர் விஜயபாபுவுடன் சேர்ந்து கஞ்சா விற்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×