search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சிதம்பரம் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் மீட்பு

    சிதம்பரம் அருகே பரவனாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேரை பேரிடர் மீட்பு குழுவினர் படகுமூலம் மீட்டனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    அதன்படி புதுச்சத்திரம் பகுதியில் உள்ள பரவனாற்றில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் அந்த பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை மூழ்கடித்து உள்ளது.

    இதனை அறிந்த இறால் பண்ணை உரிமையாளர்களான சீர்காழியை சேர்ந்த இளங்கோவன் (வயது 50), இளமாறன் (24), காயல்பட்டு பகுதியை சேர்ந்த பாஸ்கர் ஆகியோர் காயல்பட்டு பகுதியில் உள்ள தங்களது இறால் பண்ணைக்கு சென்றனர்.

    அங்குள்ள தண்ணீரை வெளியேற்ற முயற்சித்தபோது பரவனாற்று வெள்ளத்தில் சிக்கினர். கண்இமைக்கும் நேரத்தில் காட்டாற்று வெள்ளம் 3 பேரையும் அடித்து சென்றது. அவர்கள் உயிர் பிழைக்க அபயகுரலிட்டனர்.

    தகவல் அறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேரையும் படகு மூலம் மீட்டனர். அதன்பின்னரே அவர்கள் நிம்மதியடைந்தனர்.
    Next Story
    ×