என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தளவாய்புரம் அருகே இரு சக்கர வாகனம் மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்3 Dec 2020 1:45 PM GMT (Updated: 3 Dec 2020 1:45 PM GMT)
தளவாய்புரம் அருகே இரு சக்கர வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தளவாய்புரம்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது57). கட்டிட தொழிலாளி. இந்தநிலையில் ராஜா நேற்று மாலை தளவாய்புரம் அருகே உள்ள சோழபுரத்தில் உள்ள தனது தாயை பார்க்க சோழபுரம் தனியார் மில் முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது.
இதில் தலையில் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனம் ஓட்டி வந்த பட்டியூர் சேர்ந்த இசக்கி ராஜ் (28) படுகாயமடைந்தார். இதுபற்றி தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த இசக்கி ராஜை சிகிச்சைக்காகவும், பலியான ராஜாவை பிரேத பரிசோதனைக்காகவும் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X