search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

    ராஜபாளையம் அருகே விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராஜபாளையம்:

    விவசாய மசோதா திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 50 பேரை கீழராஜகுலராமன் போலீசார் கைது செய்தனர்.

    டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் பேராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிவகாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசு வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×