search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கடலூர் அருகே மனைவியை தாக்கிய தொழிலாளி கைது

    கடலூர் அருகே மனைவியை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் வண்டிப்பாளையம் சுரேஷ்நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34). தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி (35). இவர் கடலூரில் உள்ள பிரபல தனியார் மின்சாதன பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

    இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று விஜயலட்சுமியை சுரேஷ் ஆபாசமாக திட்டி, தாக்கியதோடு, உனது பெற்றோரிடம் இருந்து நகை, பணம் வாங்கிவர கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. 

    இது பற்றி விஜயலட்சுமி கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுடர்மதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

    Next Story
    ×