search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கடலூர் முதுநகரில் விஷம் குடித்து பெண் என்ஜினீயர் தற்கொலை

    நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை இறந்த சோகத்தில் கடலூர் முதுநகரில் பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் கள்ளசெட்டி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ராகவி (வயது 25), என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். இவரது தந்தை ராஜேந்திரன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது தாயார் சித்ரா பிரான்ஸ் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். ராகவி அவரது உறவினரான கடலூர் முதுநகரை சேர்ந்த ராமலிங்கம் என்பவருடைய பாதுகாப்பில் வசித்து வந்தார். ராகவி என்ஜினீயரிங் படிக்கும்போது, தன்னுடன் படித்த புதுச்சேரியை சேர்ந்த சங்கேஷ் என்பவரை காதலித்து வந்தார். இதையறிந்த இருவருடைய குடும்பத்தினரும் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, கடந்த மாதம் நிச்சயதார்த்தம் செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சங்கேஷ் உடல்நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தார்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராகவி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராகவி உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை உயிரிழந்த சோகத்தில் பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×