என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்போன் தொலைத்ததை தந்தை கண்டித்ததால் மாணவி தற்கொலை
Byமாலை மலர்3 Dec 2020 12:47 AM GMT (Updated: 3 Dec 2020 12:47 AM GMT)
ஆன்லைன் வகுப்புக்காக வாங்கி கொடுத்த செல்போன் தொலைத்ததை தந்தை கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள படைநிலை முதலியார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 65), கூலித்தொழிலாளி. இவருடைய மகள் நட்சத்திரவள்ளி (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அய்யப்பன் நாயகன் பேட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக கணேசன் மகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்தார். இந்தநிலையில் நட்சத்திரவள்ளி செல்போனை தொலைத்து விட்டாராம்.
இதைஅறிந்த கணேசன் கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்த செல்போனை தொலைத்துவிட்டாயே என கூறி மகளை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நட்சத்திரவள்ளி கடந்த 23-ந்தேதி மாலை குண்டுமணி என்ற விஷ விதையை தின்று மயங்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு நட்சத்திர வள்ளி இறந்தார். இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள படைநிலை முதலியார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 65), கூலித்தொழிலாளி. இவருடைய மகள் நட்சத்திரவள்ளி (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அய்யப்பன் நாயகன் பேட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக கணேசன் மகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்தார். இந்தநிலையில் நட்சத்திரவள்ளி செல்போனை தொலைத்து விட்டாராம்.
இதைஅறிந்த கணேசன் கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்த செல்போனை தொலைத்துவிட்டாயே என கூறி மகளை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நட்சத்திரவள்ளி கடந்த 23-ந்தேதி மாலை குண்டுமணி என்ற விஷ விதையை தின்று மயங்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு நட்சத்திர வள்ளி இறந்தார். இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X