என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோத்தகிரி அருகே காட்டுப்பன்றி தாக்கி பெண் பலி
Byமாலை மலர்1 Dec 2020 8:57 AM GMT (Updated: 1 Dec 2020 8:57 AM GMT)
கோத்தகிரி அருகே காட்டுப்பன்றி தாக்கி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோத்தகிரி:
கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரி தென்றல் நகரை சேர்ந்தவர் சரோஜா என்ற காளியம்மாள் (வயது 53). இவர் நேற்று மாலை 7 மணியளவில் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காட்டுப்பன்றி காளியம்மாளை தாக்கியது. இதில் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காளியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக அந்த காட்டுப்பன்றி அதே பகுதியை சேர்ந்த ஜோன் (76) என்பவரையும் தாக்கியது. இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் கதறிய அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காட்டுப்பன்றியை விரட்டினர். பின்னர் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரி தென்றல் நகரை சேர்ந்தவர் சரோஜா என்ற காளியம்மாள் (வயது 53). இவர் நேற்று மாலை 7 மணியளவில் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காட்டுப்பன்றி காளியம்மாளை தாக்கியது. இதில் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காளியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக அந்த காட்டுப்பன்றி அதே பகுதியை சேர்ந்த ஜோன் (76) என்பவரையும் தாக்கியது. இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் கதறிய அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காட்டுப்பன்றியை விரட்டினர். பின்னர் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X